பல்வகையான பக்தியின் மூலம் முக்தியடைந்த அடியார்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங்களை அறியலாம்.சாஸ்திரங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.
சரவணம்:
கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவரிடம் பக்தியை வெளிப்படுத்துவது சரவணம் ஆகும்.
கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவரிடம் பக்தியை வெளிப்படுத்துவது சரவணம் ஆகும்.
கீர்த்தனம்:
இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
ஸ்மரணம்:
இறைவன் நம் மனதை படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப்போதும் அவரைப்பற்றி நினைந்துருகுவது ஸ்மரணம்
இறைவன் நம் மனதை படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப்போதும் அவரைப்பற்றி நினைந்துருகுவது ஸ்மரணம்
பாதஸேவனம்:
இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.
இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.
வந்தனம்:
இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எனவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.
இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எனவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.
தஸ்யம்:
எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.
எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.
ஸக்யம்:
அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.
அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.
ஆத்ம நிவேதனம்:
இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.
இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.
0 கருத்துகள்