பூராடம்;

பூராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
நகர்: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம். அப்பிரதீசுவரர் அருளாசி வழங்கும் அற்புதத் தலம்.
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தலம். பழைமையும் பெருமையும் வாய்ந்த சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் தலம். ‘சிதம்பர ரகசியம்’ இங்கே விசே~ம். சபாநாயகராக அருள்; பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவகாம சுந்தரி அருளாசி வழங்குகிறாள்.
கடுவெளி: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு வடக்கில் 3கி.மீ தூரத்ததில், கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆகாசபுரீசுவரர் அருள் பாலிக்கும் திருத்தலம்.
பூராட நட்சத்திர மந்திரம்
அஷ்டா தேவதா: நித்யம் ஆப: ஸந்து ஸீபப்ரதா| சமுத்ரகா: தரங்கிண்ய: பாலின்ய: ஸர்வதேஹிநாம்||
(அஷ்டா ஸ்ரீ பூர்வாஷ்டா ஸ்ரீ பூராடம்)
வருண காயத்ரி
ஓம் பஸ்சிமேசாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி|
தந்நோ வருண ப்ரசோதயாத்||
0 கருத்துகள்