உத்திராடம்

உத்திராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கோயம்பேடு: சென்னைக்கு மேற்கில் 8கி.மீ குறுங்காலீசுவரர் - தர்மசம்வர்த்தனி அருள்பாலிக்கும் தலம். லவ குசர்கள் மண்ணை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்ட கோயில். வடக்கு திசை நோக்கிய சந்நிதி;. தலமரம் - பலா.
காங்கேயநல்லூர்: காட்பாடிக்கு தென் கிழக்கே 4கி.மீ காங்கேசுவரர் - பாலகுஜாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம். முருகப் பெருமான் வழிபட்டதால் இத்தல இறைவன் ‘காங்கேசப் பெருமான்’ என அழைக்கப்படுகறார்.
பே;ர்: சேலத்துக்கு கிழக்கே 32கி.மீ கணம்புல்ல நாயனார் இத்திருத்தலத்தைச் சேர்ந்தவர். சுயம்புலிங்கமாக தான்தோன்றீசுசரர், அறம் வளர்த்த அம்மையுடன் அருள்;;பாலிக்கும் தலம்.
திருஇன்னம்பூர்: கும்பகோணத்துக்கு வடமேற்கே 6கி.மீ. எழுத்தறி நாதேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலம். ஐராவதம் வழிபட்ட தலம். அன்னை சுகந்த குந்தளாம்பிகை. நித்திய கல்யாணி என்றும் தனியாக அன்னையின் சந்நிதி உள்ளது.
திருப்பூவனூர்: மன்னார்குடிக்கு வடக்கே 10கி.மீ. சதுரங்க வல்லபநாதர் அருள்பாலிக்கும் தலம். கற்பகவல்லி, ராஜராஜேசுவரி என இறைவி சந்நிதிகள் இரண்டு.
திருக்கடிக்குளம்: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ. ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.
திருப்பூவணம்;: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.
திருக்கோ~;டியூர்: சிவகங்கையிலிருந்து 19 கி.மீ அ~;டாங்க விமானம் அமைந்த வைணவ திவ்ய தேசம். தேவர்கள் ஒன்றாகக் கூடி, பரந்தாமனை வேண்டி, இரணியனை சம்ஹரித்திடக் கோரிய தலம். உலகோருக்கு ஸ்ரீராமானுஜர், தளங்களில் நாராயணன் சேவை சாதிக்கிறார்.
நட்சத்திர மந்திரம்
விஸ்வாந் தேவாநஹம் வந்தே அஷ்டா நட்சத்திரவதா| ஸ்ரீபுஷ்டி கீர்த்தி: தீதாரூன் ஸர்வ பாபாபனுத்ரயே||
(ஆஷ்டா – உத்திராடம்)
வினாயக காயத்ரி
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி|
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்||
0 கருத்துகள்