
திருவோணம்
அம்பு வடிவில் புலியை நோக்கிப் பாய்ந்த அந்த மூன்று நட்சத்திரத் தொகுப்பே திரவோண நட்சத்திரமாகும். நாராயணனின் அவதாரத் திருநட்சத்திரமும் இதுதான் என்பதால், திருவோண நட்சத்திர அன்பர்கள் திருப்பதி பெருமாளை வழிபடலாம்.
திருவோண நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய இன்னொரு கோயிலும் உண்டு. அது, திருமுல்லைவாயில், சென்னைக்கு மேற்கில் உள்ள ஆவடியை ஒட்டியுள்ள திருத்தலம். மாசிலாமணி நாதர் அருள் பாலிக்கும் இந்தத் திருத்தலத்தில், இரண்டு அதிசய ‘வெள்ளெருக்கு தூண்கள்’ உள்ளன. மூலவர் சந்நிதியின் இருபறமும் உள்ள இந்தத் தூண்கள், தொண்டைமான் சக்கரவர்த்தியால் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதாம்.
எருக்கஞ்செடியை தல விருட்சமாகக் கொண்டே கோயில்களோடு, கொடியிடை நாயகி – மாசிலாமணீசுவரர் அருள் பாலிக்கும் இந்த திருமுல்லைவாயில் திருத்தலத்தையும் வணங்கலாம்.
திருவோண நட்சத்திர மந்திரம்
சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம் ச்ரவண நட்சத்திர வல்லபம்|
விஷ்ணும் கமலபத்ராகூம் த்யாயேத் கருட வாகனம்||
(ச்ரவண – திருவோணம்)
நாராயண காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி|
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||
0 கருத்துகள்