
அவிட்டம்
அவிட்ட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். இங்குள்ள பழமையான வன்னிமரத்தை வலம் வருவதே நற்பலன்களைத் தரும். அன்னை பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று இரண்டு சந்நிதிகள். மூலவர் விருத்தகிரீசுவரர்;.
திருவான்மியூர்:
சென்னைக்கு தெற்கில் 8கி.மீ. தெ;hலைவில் உள்ள கடற்கரைத் தலம். வன்மீகர், மருந்தீசுவரர், பால்வண்ணநாதர் என்ற பெயர் கொண்டு ஈசன் அருள்பாலிக்கும் தலம். அன்னை திரிபுரசுந்தரி. மார்க்கண்டேயருக்கு வன்னிமரத்தடியில் இறைவன் ரி~பாரூடராகக் காட்சி தந்த தலம்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.
திருப்பூந்துருத்தி:
திருவையாற்றுக்கு மேற்கில் 5கி.மீ சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள்பாலிக்கும் தலம்.
திருக்கொள்ளிக்காடு
: திருவாரூர் மாவட்டம், கச்சனத்துக்கு மேற்கே 8 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் தலம், சனி பகவான் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது.
திருமறைக்காடு:
தஞ்சாவூருக்கு தென்கிழக்கில் 100கி.மீ. வேதாரண்யம் என்ற கடற்கரைத் தலம். வேதங்கள் வழிபட்டு, திருக்காப்பிட்டுக் கொண்ட கோயில், சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று.
கொடுமுடி:
‘பாண்டிக் கொடுமுடி’ என்று அ;ழைக்கப்படும் கொங்கு நாட்டுத் தலம். மகுடேஸ்வரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். வன்னிமரத்தடியில் பிரம்மா காட்சி தருகிறார். பிரம்மதீர்த்தம் சிறப்பு கொண்டது.
நட்சத்திர மந்திரம்
ஸ்ரவிஷ்;டா தேவதா: வந்தே வஸீந் ரதவராஸ்ரிதான்|
சங்கம் சக்ராங்கித கரான் கிரீடோஜ்வல மஸ்தகான்||
(ஸ்ரவிஷ்டா – அவிட்டம்)
விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே வாஸீதெவாய தீமஹி|
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||
0 கருத்துகள்